அருப்புக்கோட்டை கோவில் தெப்பக்குளத்தில் கர்ப்பிணி பெண் மர்ம சாவு: போலீஸ் விசாரணை!!

Read Time:1 Minute, 21 Second

ee53ac45-7e3d-4591-a6f7-e6c6e1383055_S_secvpfஅருப்புக்கோட்டை மலையரசன் கோவில் முல்லை நகரைச்சேர்ந்தவர் சுந்தரஆனந்தவள்ளி (வயது 29). இவருக்கும் மதுரையை சேர்ந்த பால்பாண்டி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது சுந்தரஆனந்தவள்ளி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்திருந்தார். பால்பாண்டி திருச்சியில் உள்ள ஜெனரேட்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மலையரசன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் மர்மமான முறையில் சுந்தரஆனந்தவள்ளி பிணமாக மிதந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டி.என்.பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post தலைமை ஆசிரியரை தாக்குவதற்காக 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்த ஆசிரியர்!!