டி.என்.பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 16–பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பிளஸ்–1 படித்து வருகிறார்.
இவருக்கு வருகிற 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி திருமண பத்திரிகையும் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
இது குறித்து குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே ஒருங்கிணைப்பாளர் பீட்டர் பால்ராஜ், சமூக நலத்துறை விரிவாக்க அதிகாரி அறிவு கொடி மற்றும் ஜோஸ்வர் வில்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது தவறு. எனவே உங்கள் மகளுக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வையுங்கள் என்று அறிவுரை கூறினர்.
இதை லட்சுமியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு அதிகாரிகள் அவர்களிடம், “எங்கள் மகளுக்கு 18 வயது நிரம்பியவுடனேயே திருமணம் செய்து வைப்போம்” என்று எழுதி வாங்கினர்.
Average Rating