சிதம்பரத்தில் பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது!!
சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் இருப்பதாக போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் தலைமையில் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெரு, கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெரு, வேங்கான்தெரு ஆகிய இடங்களில் உள்ள கிளினிக்குகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சித்த மருத்துவம் படித்துவிட்டு எம்.பி.பி.எஸ். டாக்டர் என்று கூறி நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மற்றும் ஊசி போட்டு சிகிச்சை அளித்ததாக கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெருவில் கிளினிக் நடத்திய சிதம்பரம் அண்ணா தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வேணுகோபால் பிள்ளை சாலையில் கிளினிக் நடத்திய சிதம்பரம் வண்டிகேட்டை சேர்ந்த சேகர் மனைவி நீலாவதியும் (37) கைது செய்யப்பட்டார். போலீசாரின் திடீர் ஆய்வை முன்கூட்டியே அறிந்த வேங்கான் தெருவை சேர்ந்த போலி டாக்டர் சங்கர் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வேலைவீசி தேடி வருகின்றனர்.
Average Rating