மன்மத நாம ஆண்டில் மழை குறையும்: யுகாதி புத்தாண்டு பஞ்சாங்கத்தில் தகவல்!!

Read Time:1 Minute, 33 Second

67eeeee0-4380-41f6-8710-043ef5ce8467_S_secvpfதெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டு புதிய ஆண்டான ‘மன்மத நாம’ வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டது.

ஐதராபாத் ரவிந்திரபாரத் ஆடிட்டோரியத்தில் தெலுங்கானா அரசு சார்பில் யுகாதி திருநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பஞ்சாங்க நிபுணர் யாயவரம் சந்திரசேகர சித்தாந்தி மன்மத ஆண்டின் பஞ்சாங்கம் படித்தார்.

அப்போது இந்த ஆண்டு தெலுங்கானாவில் மழை குறைவாக இருக்கும் என்றும் வருண ஜெபம், ருத்ரயாகம் போன்ற பூஜைகள் நடத்தி வருண பகவானை வழிபட்டால் பலன் பெறலாம் என்றும் கூறினார்.

ராஜா ஸ்தானத்தில் சனி இருப்பதால் மழை குறைவாக இருக்கும் என்றும், மேகத்தின் அதிபதியான சந்திரனால் விபரீத காற்று ஏற்படும் என்றும் இதனால் பயிர் நாசம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

மழை வேண்டி யாகம் நடத்தினால் உரிய பலன் கிடைக்கும் என்றும் சந்திரசேகர சித்தாந்தி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குஜராத்: 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமையாசிரியர்!!
Next post தேர்வில் காப்பி அடித்ததை தடுத்ததால் கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்: மாணவர் கைது!!