பண மோசடி விவகாரத்தில் சிக்கிய நடிகை..!!

Read Time:1 Minute, 56 Second

silpaபண மோசடி விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்த பணம் திருப்பி தரப்படும் என்றும், அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கூறியபடி பணம் திருப்பி வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து எம்.கே. மீடியா நிறுவனம் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் தேபஷிஸ் குகா என்பவர் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சாரணி போலீசில் புகார் செய்தார். இதை பெற்றுக்கொண்ட போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு சன்மானம்!!
Next post ஆந்திராவுக்கு சென்ற சென்னை ரெயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை!!