உத்தரபிரதேசத்தில் 3 பெண்கள் கற்பழித்து கொலை: 2 பேர் கைது!!
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தோலா கிராமத்தைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை புல் அறுப்பதற்காக சிவான் காட்டுப்பகுதிக்குள் சென்றனர். வழக்கமாக மாலையில் வீடு திரும்பி விடும் அவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். இதுபற்றி 3 பெண்களின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் 3 பெண்களும் அருகில் உள்ள வயல் பகுதியில் அடுத்தடுத்து பிணமாக கிடந்தனர். அவர்கள் தலையில் கடுமையாக தாக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 5 டாக்டர்கள் கொண்ட குழு வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 3 பெண்களும் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி தீரஜ், அம்ரேஷ் என்ற 2 வாலிபர்களை கைது செய்தனர். காதல் தகராறில் அவர்கள் ஒரு பெண்ணை முதலில் கற்பழித்து கொன்றுள்ளனர். மற்ற 2 பெண்கள் தங்களை காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் அவர்களையும் அடித்துக்கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்ட 3 பெண்களும் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தியோரியா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Average Rating