மதுரையில் காசநோய் விழிப்புணர்வு பேரணி!!
Read Time:1 Minute, 20 Second
மதுரையில் நேற்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் காசநோய் தின அனுசரிப்பு விழா நடைபெற்றது.
பேரணியில் மகாத்மா நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது தமுக்கம் மைதானத்திலிருந்து தொடங்கி அரசு மருத்துவ கல்லூரியில் முடிவு பெற்றது.
முன்னதாக பேரணியை மதுரை மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு திட்ட துணை இயக்குனர் டாக்டர் சாமி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியை தொடர்ந்து காசநோய் தின அனுசரிப்பு விழா அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
விழாவில் மகாத்மா நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் மாரிராஜனுக்கு மாவட்ட கலெக்டர் விருது வழங்கினார்.
Average Rating