ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்த ரிக் தொழிலாளி!!

Read Time:1 Minute, 35 Second

02e49037-23da-4b91-b5c4-b50f3c3937ea_S_secvpfநாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டியில் ஒரு தனியார் கோழி தீவன ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் பின்னால் நாமக்கல்-கரூர் ரெயில் பாதை செல்கிறது. இன்று அதிகாலை இந்த ரெயில் பாதையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தலை வேறு, உடல் வேறாக பிணமாக கிடந்தார். இதையடுத்து பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக கிடப்பவர் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டாஞ்சேரி மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் (50) ரிக் தொழிலாளி என்று தெரியவந்தது. மேலும் அவரது மாமியார் ஊர் வகுரம்பட்டி என்பதும் தெரியவந்தது.

எனவே அவர் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து தலையை துண்டித்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தைவேலின் பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடியில் குடிநீர் குழாய்களை உடைத்து தண்ணீரை திருடும் கும்பல்!!
Next post ஜோலார்பேட்டையில் குழந்தை வரம் கேட்டு கோவில் முன்பு நாக்கை அறுத்து வைத்த வாலிபர்!!