உ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!!
வரதட்சணைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 75 வயது மூதாட்டியை ஒரு கொடூர கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மாவட்டமான லகிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள நீம்கான் கிராமத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றிரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வேளையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு சமூக விரோத கும்பல் அவரது வயோதிகத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த மூதாட்டியை மாறி, மாறி கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றது.
இன்று காலை பொழுது விடிந்ததும் அந்த மூதாட்டியின் கூச்சலை கேட்டு விரைந்துவந்த கிராம மக்கள் இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating