திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை!!
Read Time:1 Minute, 12 Second
திருப்பதி அருகே ரேணிகுண்டா சாலையில் சாக்கடை கால்வாயில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேணிகுண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் அடையாளம் தெரியாத வகையில் பெண் பிணம் ஒன்று இருந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு பெண்ணின் உடலை மர்ம நபர்கள் சிதைத்துள்ளனர்.
பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார்? என்ற விவரமும் தெரியவில்லை. பெண்ணின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக போலீசார் திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating