காளஹஸ்தி அருகே சிறுமி கடத்தி பலாத்காரம் : 2 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே திகுவமோதுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது பெண், கடந்த 28–ந்தேதி இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது பாட்டியிடம் படுத்துத்தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), பிரதீப் (22) ஆகியோர் நள்ளிரவு நேரத்தில் வந்து பெண்ணின் வாயை பொத்தி கிராமத்துக்கு அருகேயுள்ள ஒரு மாந்தோட்டத்துக்கு தூக்கி சென்றனர்.
மாந்தோட்டத்தில் பெண்ணை வைத்து பிரதீப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மாந்தோட்டத்துக்கு யாரும் வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக ராஜேஷ் காவலுக்கு நின்றிருந்ததாக தெரிகிறது. அந்த பெண் சத்தம் போடாமல் இருப்பதற்காக பெண்ணின் வாயில் பிளாஸ்டரை ஒட்டி ஒரு மாமரத்தில் கட்டிப்போட்டு விட்டு இரு வாலிபர்களும் தலைமறைவாகி விட்டனர். பொழுது விடிந்ததும் பெண்ணை காணாததை கண்டு குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.
பல இடங்களில் தேடியும் பெண்ணை காணவில்லை. கிராமத்துக்கு அருகேயுள்ள ஒரு மாந்தோட்டத்தில் மரத்தில் கட்டிப்போட்டு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. பெண்ணை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர். பெண்ணிடம் விசாரித்த போது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது பற்றி பெண்ணின் பெற்றோர் தவனம்பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனைக்காக பெண்ணை சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராஜேஷ், பிரதீப்பை போலீசார் தேடி வந்தனர்.
இருவரும், டி.புத்தூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று ராஜேசையும், பிரதீப்பையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating