சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு வலைவீச்சு!!

Read Time:2 Minute, 47 Second

de959de6-7ed1-4b72-9599-122e9dafe326_S_secvpfசேலம் அருகில் உள்ளது தேக்கம்பட்டி. இங்குள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

சரவணனும், அவரது மனைவியும் கல் உடைக்கும் வேலைக்கு வெளியில் சென்றுவிட்டனர். இதனால் குழந்தை பானு (வயது 11– பெயர் மாற்றப்பட்டுள்ளது). மட்டும் பாட்டி மாரியம்மாளிடம் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர்.

பானு காலை, மாலை நேரங்களில் வீட்டுக்கு அருகில் விளையாடுவார். இவருடன் மற்ற சிறுவர்– சிறுமிகளும் விளையாடுவார்கள்.

இதுபோல் நேற்று பகல் 3 மணி அளவில் சிறுமி வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது மாரியம்மாள் சிறுமியை அழைத்து வெற்றிலை வாங்கி வர அனுப்பி வைத்தார். இதனால் பானு அதே பகுதியில் கட்டில் கடை வைத்து இருக்கும் மொசக்காதன் என்கிற ராஜா (வயது 55) என்பவரிடம் சென்று வெற்றிலை வாங்கினார்.

அப்போது மொசக்காதன் சிறுமியை அருகில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து விடுவார்கள் என எண்ணிய மொசக்காதன் சிறுமியை விட்டு விட்டார். இவரிடம் இருந்து தப்பிய சிறுமி அவரது பாட்டி மாரியம்மாளிடம் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.

பின்னர் மாரியம்மாள் இதுகுறித்து சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தா மற்றும் போலீசார் முதியவர் மொசக்காதன் மீது பாலியல் தொல்லை செய்தல்,. கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை அறிந்த மொசக்காதன் தலைமறைவாகி விட்டார். இவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி யில் தொடரும் கொடூரம்: துப்பாக்கி முனையில் 2 இளம் சகோதரிகள் பாலியல் வன்புணர்வு!!
Next post சேலம் அருகே சிறுவன் மாயம்!!