சேலம் அருகே சிறுவன் மாயம்!!
Read Time:47 Second
சேலம் சண்முகநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்வன் ஆறுமுகம் (வயது 13). இவர் கடந்த 18–ந்தேதி வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. சிறுவனை பெற்றோர் அக்கம் பக்கம் தேடினர். எங்கும் சிறுவன் இல்லை.
பின்னர் இதுபற்றி சேலம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சிறுவனை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0427– 2270513, அல்லது 9498100950 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
Average Rating