கருங்கல் அருகே பேராசிரியையை ஈவ்டீசிங் செய்த 5 பேர் கைது!!

Read Time:2 Minute, 2 Second

7c96a497-4cec-46bf-ab68-f743a7df707b_S_secvpfகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 22–பெயர் மாற்றப்பட்டுள்ளது).

சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்க்கிறார்.

இவர் நேற்று மதியம் நடுத்தேரி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவ்வழியாக காரில் ஒரு கும்பல் வந்தனர். சுதாவின் அருகே காரை நிறுத்திய அந்த கும்பல் திடீரென சுதா பற்றி தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அவரை ஈவ் டீசிங் செய்தனர்.

இதனால் மனமுடைந்த சுதா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதைக்கண்ட காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் பொதுமக்கள் விடாமல் துரத்தி 5 பேரை மடக்கிப் பிடித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் பாலப்பள்ளத்தை சேர்ந்த ராஜன் என்ற ராஜகோபால் (39), ஹரிகரசுதன்(26), கனகராஜ்(42), திக்கணங்கோடை சேர்ந்த சிவகுமார்(23), அஜின்(25) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சுதா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ராஜன் உள்பட 5 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். அவர்களிடம் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்து 1 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிய தாய்: போலீசார் மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர்!!
Next post பரமக்குடியில் போலீசாரை தாக்கி கஞ்சா கடத்தல்: தந்தை–மகன் கைது!!