பூச்சு மருந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!
Read Time:1 Minute, 13 Second
தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள எடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30), திருமணமான இவர் அதே கிராமத்தில் வசித்துவந்த வேறொருவரின் மனைவியான ரமா(28) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
இந்த தகாத தொடர்பு பற்றிய தகவல் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்ததையடுத்து, இருவரையும் கண்டித்து வைக்க அவர்கள் முடிவு செய்தனர்.
இதற்கிடையில், இன்று அதிகாலை இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர். கிராம பஞ்சாயத்தில் நம்மை பிரித்து வைத்து விடுவார்களோ..? என அஞ்சிய இவர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இருவரின் பிரேதங்களையும் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.
Average Rating