லண்டனில் தீ விபத்து 3 தமிழர்கள் பலி.
Read Time:1 Minute, 18 Second
தென் மேற்கு லண்டன் விம்பில்டன் பாக் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ மேல் மாடி கட்டிடத்திற்கு பரவியதால் 2 அகவையுடைய குழந்தை உட்பட 3 ஈழத்தமிழர்கள் தீயில் கருகி பரிதாபகரமாக உயிர் இழந்து உள்ளனர்.
வவுனியா நெடுங்குளத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவஞானம் அவரது துணைவியார் தனலட்சுமி சிவஞானம் அவர்களின் பேத்தியான செல்வி அர்ச்சான ரவீந்திரன் (அகவை 2) ஆகியோரே உயிர் இழந்து உள்ளனர். இச்சம்பவம் 03.07.06 மாலை நடைபெற்றுள்ளது.
சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்த சிவஞானத்தின் மருமகன் மாடியிலிருந்து குதித்த காயங்களுடன் தப்பியுள்ளார் இறந்தவரின் மகள் பாடசாளைக்கு சென்று பிள்ளையை கூட்டிவருவதற்குச் சென்றிருந்தார். சமையல் வாயு குழாய் வெடித்ததனால் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது