வாழப்பாடி அருகே மனைவியை கொன்ற கணவர் கைது!!

Read Time:2 Minute, 49 Second

b74432f9-9ef3-41b3-8fd8-f8ab1a8b5f17_S_secvpfசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(43). இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவி சாந்தியின் நடத்தையில் மனோகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன்–மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

மீண்டும் நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மனோகரன் திடீரென மனைவி சாந்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

பின்னர் 2 மகன்களையும் அவர் அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள அக்காள் பாப்பாத்தி என்பவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த உறவினர்களிடம் குடும்ப தகராறில் மனைவி சாந்தியை வெட்டி கொலை செய்து விட்டதாகவும், இதனால் எனது மகன்கள் இருவரையும் பார்த்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மனோகரனை தேடி வந்தனர். அவரது உறவினர்களின் ஒவ்வொரு வீடுகளிலும் தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர் வாழப்பாடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த மனோகரனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று இரவு தனது மனைவி சாந்தியை ஆசைக்கு இணங்க வருமாறு அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்துள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனோகரன் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து, மனைவியை வெட்டி கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூருவில் மாணவியை சுட்டுக் கொன்றவருக்கு 10-ந்தேதி வரை போலீஸ் காவல்!!
Next post மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது!!