வீட்டில் அடைத்து வைத்து 14 வயது சிறுமியை 3 நாள் கற்பழித்த வாலிபர் கைது!!

Read Time:2 Minute, 22 Second

e418440e-dc34-40e5-a28a-bf8fefbab91b_S_secvpfஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் ஐதராபாத்தில் உள்ளனர். துனியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

இவர் திருப்பதியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு துனி திரும்பினார். வேதனையில் இருந்த அவர் வீட்டுக்கு செல்லாமல் ரெயில் நிலையத்தில் சோகமாக அமர்ந்து இருந்தார்.

அப்போது வீரபாகு (30) என்ற வாலிபர் பூஜாவிடம் அன்பாக பேசினார். தன்னுடன் வருமாறு அழைத்தார். சம்மதம் தெரிவித்த பூஜாவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி விசாகப்பட்டினம் அழைத்து வந்தார்.

விசாகப்பட்டினம் பூர்ணா மார்க்கெட் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவரை அடைத்து வைத்து வீரபாகு 3 நாள் கற்பழித்தார். மேலும் செக்ஸ் சித்ரவதை செய்தார்.

தப்பி ஓடிவிடாமல் இருக்கவும், சத்தம் வெளியே கேட்காமல் இருக்கவும், அவரது கை, கால்களை கட்டிப்போட்டு வாயில் துணியால் கட்டியும் அவரை கற்பழித்து வந்தார்.

வீரபாகு வீட்டில் இல்லாதபோது வீட்டுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து பூஜாவை மீட்டனர். அவரை கற்பழித்த வீரபாகுவையும் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், ‘‘வீரபாகுவும், அவரது நண்பர்கள் 2 பேரும் 3 நாள் தன்னை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாக’’ பூஜா கூறினார்.

தப்பி ஓடிய வீரபாகுவின் நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சத்தீஸ்கரில் பரிதாபம்: காட்டு யானை கூட்டத்திடம் மிதிபட்டு 3 பெண்கள் பலி!!
Next post தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி!!