அரியானாவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த 5 பேர் கும்பல்!!

Read Time:4 Minute, 3 Second

d509f791-873b-4d23-9485-78166c5cf929_S_secvpfஅரியானாவில் உள்ள குர்கோனில் வசித்து வந்த மேற்கு வங்க மாநில பெண் ஒருவரை கடத்தி சென்ற 5 பேர் கும்பல், உணவு கூட தராமல் அவரை 3 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து குர்கோன் துணை காவல் ஆணையர்(குற்றப்பிரிவு) ராஜேஷ் குமார் கூறுகையில், வாசிராபாத் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் இப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது அது வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அப்பெண்ணை மீட்டனர் என்று ராஜேஷ்குமார் கூறினார். மீட்கப்பட்ட 32 வயதான அப்பெண் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், குர்கோனில் உள்ள டி.எல்.எப். பேஸ் 5 குடியிருப்பில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த தான் வசித்து வருவதாகவும், அங்கு வீட்டு வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி இரவு 11 மணியளவில் தனது வீட்டின் கதவை தட்டிய தலீப் என்கிற பாபு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், தனது கை, கால்களை கட்டி ஆட்டோவில் கடத்தி சென்றதாகவும், அங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள வாசிராபாத்திற்கு ஆட்டோவில் கடத்தி சென்று தன்னை மாறி மாறி கற்பழித்தாகவும் கூறியுள்ளார்.

அப்பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் போலீசிடம் தெரிவித்துள்ள தகவலின் படி, கற்பழிக்கப்பட்ட அப்பெண் அல்தாப் என்ற நபருக்கு 1 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை அப்பெண் திருப்பி கேட்டபோது, பணத்தை தர மறுத்த அல்தாப் அவரை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் ரவுடியாக சுற்றி வருபவனும், ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவனுமான தலீப்பை சந்தித்த அல்தாப், அப்பெண்ணுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என்று கூறியுள்ளான்.

இதை தொடர்ந்தே தனது கூட்டாளிகள் நால்வருடன் சேர்ந்து அப்பெண்ணை கடத்தி சென்ற தலிப், உணவு கூட வழங்காமல் 3 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்துள்ளார். மேலும் தன்னுடன் ஆயுள் முழுக்க சேர்ந்து வாழ்ந்தால் 1 லட்ச ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளான். ஆனால் அப்பெண் அவனது ஆசைக்கு இணங்க மறுத்த வேலையில் தான் காவல்துறையினர் வீட்டை உடைத்து அவரை காப்பாற்றியதுடன், அப்பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் ஐவரையும் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மராட்டியத்தில் 55 மாணவிகள் மானபங்கம்: 3 ஆசிரியர்கள் கைது!!
Next post போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு!!