போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு!!

Read Time:1 Minute, 36 Second

347854b5-34af-4cc7-be66-cf2480650481_S_secvpfதேனி அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் ஆட்டோடிரைவர். இவரை கடந்த 2010–ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக தென்கரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் சந்திரசேகரன் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்டது.

அதன்படி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த இளவரசு, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், போலீசார் பாண்டி, காமராஜ் ஆகிய 4 பேரையும் சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி அறிவுச்செல்வம் உத்தரவிட்டார். தற்போது இளவரசு பழனியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், போலீசார் பாண்டி, காமராஜ் ஆகியோர் பதவி உயர்வு பெற்று பழனிசெட்டிபட்டி, பெரியகுளம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரியானாவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த 5 பேர் கும்பல்!!
Next post அடையாறில் 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!!