அரியானாவில் ட்ரங்க் பெட்டியில் இளஞ்ஜோடி சடலம் கண்டெடுப்பு: கவுரவக்கொலை என சந்தேகம்!!
அரியானாவில் உள்ள பூங்கா அருகில் ட்ரங்க் பெட்டிகளில் இளஞ்ஜோடி சடலங்களை போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர். இது கவுரவக்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
காதலித்து திருமணம் செய்வது பெரும் தவறு என்று கருதும் பெற்றோர்கள் தங்கள் மகன் மற்றும் மகளையோ வெறுத்து ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் கொடூர குணம் கொண்ட பெற்றோர்களோ தாங்கள் பெற்று வளர்த்த குழந்தை என்று பார்க்காமல் கொலை செய்கின்றனர். அந்த வகையில் சோனேபட்டிலும் இக்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருவரின் உடலும் தனித்தனி பெட்டியில் நிர்வாணமாக காணப்படுகின்றன.
திருமணம் செய்து கொண்ட பெண்கள் அணியும் வளையலை அப்பெண் அணிந்துள்ளதால், இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆணின் சடலத்தில் இரு கால்களை மட்டும் காணவில்லை. இச்சம்பவம் வேறு எங்காவது நடைபெற்று இருக்கலாம் என்றும் சடலத்தை மட்டும் இங்கு கொண்டுவந்து போட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Average Rating