முதல் மனைவியின் சாமர்த்தியத்தால் ராணுவவீரரின் 2–வது திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 42 Second

8b1f815f-9180-4945-a682-8a566894fcb7_S_secvpfகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காசி. அவரது மகன் விஜயகுமார் (வயது 27). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

அவருக்கும், வாணியம்பாடி வி.எஸ்.கே. நகரை சேர்ந்த பாபுவின் மகள் மைதிலிக்கும் இன்று காலை காரப்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் விஜயகுமார் ஏற்கனவே சிவகங்கையை சேர்ந்த சுமதி என்கிற ராஜம் என்ற பெண்ணை திருமணம் செய்து இருப்பதாகவும், தனக்கும், அவருக்கும் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டு திருமணம் நடந்ததாகவும், அதன் மூலம் 2 குழந்தைகள் இருப்பதாகவும், திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தையும், இதர ஆதாரங்களையும் மணப்பெண் வீட்டிற்கு தபால் மூலம் சுமதி அனுப்பியுள்ளார்.

இதைக்கண்ட மணப்பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மணப்பெண் வீட்டார், திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை ஐ.சி.எப்.பில் அரிசி கடை அதிபர் மனைவி கொலையில் ஊழியர் கைது!!
Next post உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி…?