குஜராத்தில் 9 வயது சிறுமி தற்கொலை!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 9 வயது சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பக்வாடிபரா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வரும் அந்தச் சிறுமி, பெற்றொர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய சிறுமியின் தாயார், எரிந்த நிலையில் கிடந்த மகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, ஆழமான தீக்காயங்களின் காரணமாக சிகிச்சை தொடங்கிய சில நிமிடங்களிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பள்ளி செல்வதற்கு விரும்பாத அந்த சிறுமி, முழு ஆண்டுத் தேர்வுக்குப் படிக்காமல் இருந்ததாகவும், அந்த பயத்திலேயே இந்த விபரீத முடிவை எடுத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating