வேலை நாளில் பூட்டிக்கிடந்த பள்ளிக்கூடங்கள்: 4 தலைமை ஆசிரியைகள் சஸ்பெண்ட்!!
Read Time:1 Minute, 12 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேலை நாட்களில் பள்ளிகளை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளும், தலைமை ஆசிரியைகளும் வீட்டில் இருப்பதாக முசாபர்நகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று சில பள்ளிகளை அதிரடியாக சோதனையிட்டபோது 4 கிராமங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் பூட்டிக்கிடப்பதும், 4 தலைமை ஆசிரியைகள் உள்பட 72 ஆசிரியர், ஆசிரியைகள் வேலைக்கு வராமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ரேகா, சிமா, வசலா அஞ்சும், ஊர்மிளா ஆகிய 4 தலைமை ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நேற்று வேலைக்கு வராத 72 ஆசிரியர், ஆசிரியைகளின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating