களக்காடு அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் டிஸ்மிஸ்!!
Read Time:1 Minute, 13 Second
களக்காடு அருகே உள்ள சூரங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி 5–வது வகுப்பு படித்து வருகிறாள். அவளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் (வயது 54) பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி சுப்பிரமணியனை கைது செய்தனர். இதற்கிடையே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பட்டது.
அதன்படி நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சுப்பிரமணியன் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா இரவிப்புதூரை சேர்ந்தவர் ஆவார்.
Average Rating