கொடைக்கானல் ஏரிச்சாலையில் உலா வந்த காட்டெருமைகள்: சுற்றுலா பயணிகள் ஓட்டம்!!
Read Time:1 Minute, 14 Second
கொடைக்கானல் பகுதியில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியினை விட்டு வெளியேறி நகர்ப்பகுதிக்குள் நுழைகின்றன. தற்போது பிளம்ஸ் சீசன் தொடங்கி உள்ளதால் அதனை உண்பதற்காகவும் நகர்ப்பகுதியினை ஒட்டி வருகின்றன.
நேற்று மாலை 6 மணியளவில் சுமார் 7 காட்டெருமைகள் கன்றுக்குட்டிகளுடன் ஏரிச்சாலை அருகே உள்ள கே.ஆர்.ஆர் கலையரங்க பகுதியினை நோக்கி வந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த சுற்றுலாப்பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் தைரியமாக காட்டெருமைகளை படம் பிடித்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் சாலையிலேயே முகாமிட்டிருந்த எருமைகள் பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன.
சுற்றுலா பயணிகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் காட்டெருமைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating