காதலியின் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட காதலன்!!
பஞ்சாப் மாநிலத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த ‘ஹரி ஷர்மா’, கஞ்சி குலாப் சிங்வாலா கிராமத்தில் உள்ள ‘விர்பால் கவுர்’ என்ற பெண்ணை உயிருக்குயிராக காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு விர்பாலின் பெற்றோர் இடையூறாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு விர்பாலின் வீட்டுக்குச் சென்ற ஹரி அவர்களிடம் விர்பாலை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்குமாறு மன்றாடிக்கேட்டுள்ளார். அவர்கள் அதற்கு மறுக்கவே தான் கையில் கொண்டு சென்ற துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, விர்பால், அவரது அப்பா பெண்ட் சிங், அம்மா ரமந்தீப், அக்கா சுகி என்று அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating