75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது!!
வரதட்சனைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 75 வயது மூதாட்டியை 25 வயது காமக் கொடூரன் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அன்டூ பகுதியை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்றிரவு வயலுக்கு சென்றபோது வழிமறித்த சஞ்சய் என்ற காமுகன், அவரது வயோதிகத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த மூதாட்டியை கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றான்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை இன்று மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அந்த மூதாட்டி கற்பழிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. குற்றவாளி சஞ்சயை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரித்து வருகின்றனர்.
Average Rating