பரீட்சையில் தோல்வி: ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!
Read Time:58 Second
ஒன்பதாம் வகுப்பு முழுஆண்டு தேர்வில் தோல்வியடைந்த கவலையில் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்பஸ்டா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி இங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தாள். சமீபத்தில் வெளியான முழுஆண்டு தேர்வு முடிவுகளில் தோல்வி அடைந்ததாக தெரியவரவே, இன்று வீட்டில் யாருமில்லாத வேளையில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டுக் கொண்ட அந்த சிறுமி உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தாள்.
Average Rating