ஒடிசாவில் 8 வயது சிறுவன் நரபலி: மந்திரவாதி கைது!!
ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கோகபாடா கிராமத்தில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த மந்திரவாதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனான ராஜேஷ் நாயக்(8) என்பவனை கடந்த திங்கட்கிழமையில் இருந்து காணவில்லை என அவனது பெற்றோர் போலீசில் நேற்று புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவந்த நிலையில் உள்ளூரில் உள்ள மந்திரவாதியுடன் அவனை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இங்குள்ள லுனா ஆற்றங்கரை பகுதியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில் ஒரு சிறுவனின் பிணம் கிடப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து, பிணத்தை கைப்பற்றிய போலீசார் உள்ளூர் மந்திரவாதியை பிடித்து விசாரித்தபோது, தனது மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காக ராஜேஷ் நாயக்கை நரபலி கொடுத்த உண்மை தெரியவந்தது. அந்த மந்திரவாதியை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Average Rating