பொள்ளாச்சியில் கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை கும்மாளம்: மனைவி புகாரால் கைது!!

Read Time:2 Minute, 13 Second

a38e22da-673e-4397-9cbd-bbcf5636bacf_S_secvpfகோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏரிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(25) என்பவருக்கும் கடந்த 16.10.2014 அன்று திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு செந்தில்குமார் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ராஜேஸ்வரி கணவர் பற்றி விசாரித்த போது செந்தில்குமார் அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி (35) என்ற பெண்ணுடன் கடந்த 7 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கணவரிடம் இது பற்றி கேட்டார். அப்போது செந்தில்குமார் மனைவியை கண்டித்ததோடு, அவரை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் தனது கள்ளக்காதலியுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த ராஜேஸ்வரி கணவரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமாரும், அவரது கள்ளக்காதலி சுப்புலட்சுமியும் சேர்ந்து ராஜேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும், இதனை வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்கு பதிவு செய்து செந்தில் குமார், அவரது கள்ளக்காதலி சுப்புலட்சுமி ஆகியோரை கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணகுடி அருகே சிறுமியை கற்பழித்த 2 மாணவர்கள் கைது!!
Next post காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டதில் எந்த தவறும் இல்லை: மசரத் ஆலம் திமிர்ப் பேச்சு!!