உ.பி.யில் பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை தலைமறைவு!!
Read Time:1 Minute, 16 Second
உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் பகுதியில் பெற்ற தந்தையே தன்னை 4 மாதங்களாக மிரட்டி கற்பழித்துவந்ததாக பாதிக்கப்பட்ட 14 வயது மகள் அளித்த புகாரையடுத்து அந்த காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.
இங்குள்ள ஷாசந்தன் பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் தாயார் நான்காண்டுகளுக்கு முன்னர் இறந்துப் போனார். அதன்பின், குடும்ப வேலைகளை தனதாக்கிக் கொண்ட அந்த சிறுமி தற்போது பருவ வயதை எட்டியதும், பெற்ற மகள் என்றும் பாராமல் அவளது தந்தை கற்பழித்துள்ளார்.
கடந்த 4 மாதங்களாக தன்னை மிரட்டி கற்பழித்து வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் அந்த காமக் கொடூரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Average Rating