சிறுமியை கூட்டாக கற்பழித்து வீடியோ படம் பிடித்த 8 பேருக்கு 10 ஆண்டு சிறை!!
பிகாரின் நவாடா மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து அந்தக் காட்சிகளை வீடியோ படம் பிடித்து, வெளியிட்ட 8 குற்றவாளிகளுக்கு இன்று 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நவாடா மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த அந்த சிறுமியை கடந்த 1-9-2011 அன்று கடத்தி சென்ற அந்த கும்பல், அவளை மிரட்டி கற்பழித்ததோடு மட்டுமின்றி, கற்பழிப்பு காட்சிகளை வீடியோவாக படம் பிடித்து செல்போன்கள் மூலமாகவும், இணையதளங்களின் வாயிலாகவும் பரவச்செய்தது.
இது தொடர்பாக அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார், குற்றவாளிகள் 8 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்தனர்.
சுமார் மூன்றாண்டு காலமாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் 8 பேருக்கும் பத்து ஆண்டு சிறை மற்றும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் நீதிபதி பிரேம்சந்திரா பாண்டே உத்தரவிட்டார்.
Average Rating