கருப்பாக இருந்ததால் வெறுப்பு: கோவையில் மனைவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

Read Time:2 Minute, 7 Second

99ef86fc-8223-4722-a64f-7d143feab5dc_S_secvpfகேரள மாநிலம் சித்தூர் மூங்கில்மடையை சேர்ந்தவர் கிட்டுசாமி. இவரது மகன் மணிகண்டன் என்கிற மணியன் (வயது 25). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவருக்கும் பொள்ளாச்சி மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்த பாக்கியா (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் திருமணம் ஆனதில் இருந்தே மணியன் பாக்கியாவை கருப்பாக இருக்கிறாய், இதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக பாக்கியம் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் மணியனும் வேறு வழியில்லாமல் அங்கு வந்து இருந்துள்ளார். சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை முற்றி தகராறு ஏற்பட்டது. இதில் மணியன், பாக்கியத்தை கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் பாக்கியம் அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

இதனை நேரில் பார்த்த பாக்கியாவின் தாய் தங்கமணி பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி.சுப்பிரமணியம் மணியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்கோட்டை மாணவன் மாயம்: போலீசில் சிக்காமல் இருக்க ஊர் ஊராக ஓடும் ஆசிரியை!!
Next post திருவல்லிக்கேணி லாட்ஜில் வாலிபர் தற்கொலை!!