திருவல்லிக்கேணி லாட்ஜில் வாலிபர் தற்கொலை!!

Read Time:1 Minute, 40 Second

b164c0e2-8586-439e-8fb9-5b6eb4bd2461_S_secvpfபெங்களூரை சேர்ந்தவர் ஜெய்ஷா செக்கர் (25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்தார்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து 3 நாட்களாக தங்கியிருந்தார். தினமும் காலையில் இன்டர்வியூவுக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருடைய அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

சந்தேகம் அடைந்த ஊழியர்கள் மாற்று சாவிக்கொண்டு அறையை திறந்தனர். உள்ளே அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். ஆங்கிலத்தில் அவர் எழுதி இருந்த இரண்டு வரி கடிதம் அறையில் இருந்தது. அதில் வேலை தேடி வந்தேன். கடவுள் என்னை கைவிட்டு விட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீசார் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெய்ஷா செக்கர் வைத்திருந்த செல்போன் நம்பர் உதவியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பாக இருந்ததால் வெறுப்பு: கோவையில் மனைவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!
Next post கொரட்டூரில் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: வியாபார சங்கம் ஏற்பாடு!!