பறிபோன புவனேஸ்வரியின் வீடு…!!
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை புவனேஸ்வரி (வயது 32). இவர் கோவை அன்னூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:–
எனக்கு சொந்தமாக கோவை அன்னூரில் வீடு மற்றும் தியேட்டர் 64 சென்ட் இடத்தில் உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு இந்த வீடு, தியேட்டரை அன்னூரை சேர்ந்த தொழில் அதிபர் சுப்பிரமணியன் என்பவருக்கு விற்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில் சுப்பிரமணியன் போலி ஆவணங்கள் தயாரித்து அன்னூர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து எனது வீடு மற்றும் தியேட்டரை அபகரித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
புகாரின்பேரில் சுப்பிரமணி மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் அன்னூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் லெட்சுமணதாஸ் விசாரணை நடத்தி வருகின்றார்.
Average Rating