கோவையில் கணவர் சினிமாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தற்கொலை!!

Read Time:1 Minute, 42 Second

326e1e08-ba37-47f1-899e-71da10c57c31_S_secvpfகோவை ஆவாரம்பாளையம் நவஇந்தியா சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சத்ய பிரியா(வயது 31).

இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. 1 மகன் உள்ளார். நேற்று சத்யபிரியா தனது கணவரை சினிமாவுக்கு அழைத்தார். ஆனால் பழனிசாமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சத்யபிரியா விஷம் அருந்தி மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சத்யபிரியா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஹோப்ஸ் கல்லூரி அருகே உள்ள பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(29). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். நேற்று மாலை காதலியை சினிமாவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ஜெய்சங்கர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுச்சேரியில் அரசு ஊழியர் வீட்டில் 84 பவுன் நகை திருட்டு!!
Next post பெண்ணாடம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது!!