கோவையில் கணவர் சினிமாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தற்கொலை!!
கோவை ஆவாரம்பாளையம் நவஇந்தியா சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சத்ய பிரியா(வயது 31).
இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. 1 மகன் உள்ளார். நேற்று சத்யபிரியா தனது கணவரை சினிமாவுக்கு அழைத்தார். ஆனால் பழனிசாமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சத்யபிரியா விஷம் அருந்தி மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சத்யபிரியா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஹோப்ஸ் கல்லூரி அருகே உள்ள பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(29). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். நேற்று மாலை காதலியை சினிமாவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஜெய்சங்கர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating