மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ. 1½ லட்சம் பணம் பறிப்பு!!

Read Time:1 Minute, 53 Second

14570386-55af-46f0-9c39-ef0b83e4eb12_S_secvpfநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியை சேர்ந்தவர் குமாரசாமி (45).
இவர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஆத்துக்குடி டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு கடையில் வசூலான ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளியில் இரவு 11 மணியளவில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அக்கும்பல் குமாரசாமியை தாக்கி அவர் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இச் சம்பவம் குறித்து குமாரசாமி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை பறித்த கும்பலை தேடி வருகிறார்கள்.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டாஸ்மாக ஊழியர்களை தாக்கி பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பிலாவாடி டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறிக்கப்ட்டது. இதே போல் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்யூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரைக்குடி அருகே எம்.எல்.ஏ. உறவினரிடம் 15 பவுன் நகை அபேஸ்!!
Next post ஆசிரியை–மாணவன் காதல்: கொடைக்கானலில் பதுங்கிய ஜோடியை பிடிக்க போலீசார் விரைவு!!