5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபன்: நையப்புடைத்த பொதுமக்கள்!!

Read Time:1 Minute, 25 Second

aab76c76-c44e-40b0-8e42-95139d6682d1_S_secvpfபெங்களூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 17 வயது வாலிபனை நையப்புடைத்த வழிப்போக்கர்கள் அவனை தரதரவென இழுத்துக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

ஜலாஹல்லி என்ற இடத்திற்கு அருகே உள்ள மதுவிடுதி ஒன்றில் வேலை பார்த்து வரும் அந்த வாலிபன், நேற்று வேலை முடிந்து தன் குடியிருப்புக்கு திரும்பியுள்ளான், அப்போது, அங்கு வசிக்கும் 5 வயது சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுமியை பொதுக் கழிப்பிடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.

இதைப் பார்த்த சில வழிபோக்கர்கள் அவனை அடித்து நொறுக்கி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். வாலிபனின் சரியான வயது தெரியும் வரை வழக்கு பதிவு செய்ய முடியாதென்று கூறிய போலீசார் பொதுமக்கள் அளித்த புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டை ஓட்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
Next post கண்டு கொள்ளாத அரசு: கைகோர்த்த கிராம மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய சாலை!!