தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை கேஷியருக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு சிபிஐ கோர்ட் தீர்ப்பு!!
Read Time:1 Minute, 12 Second
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி 5 லட்ச ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்த தலைமை காசாளருக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பள்ளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் பிகானெர் & ஜெய்ப்பூர் வங்கியின் கிளையில், தலைமைக் காசாளராக பணியாற்றி வந்தவர் சுவாமி, இவர் 5 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியிலிருந்து கையாடல் செய்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று ஜெய்ப்பூர் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வெளியானது. தீர்ப்பில், குற்றவாளியான சுவாமிக்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating