ஈரோட்டில் வரதட்சணை கொடுமைக்கு மனைவி பலி: தறிதொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!!

Read Time:1 Minute, 57 Second

4deafcfe-2742-4534-af3e-1583cab5f53b_S_secvpfஈரோடு மாவட்ட சென்னிமலை தெற்கு ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 29). தறி தொழிலாளி.

இவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. முதல் மனைவி இறந்துவிட்டதால் யோகேஸ்வரன் சித்ரா (29) என்ற பெண்ணை 2–வதாக திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆகி 1½ வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் யோகேஸ்வரன் 2–வது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 31.03.2013 அன்று சித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட யோகேஸ்வரனுக்கு மனைவியை துன்புறுத்தியதாக 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் மேலும் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை கட்டத்தவறினால் 6 மாத ஜெயில் தண்டனையும் இவற்றை ஏகபோக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி ஆஜர் ஆனார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பரங்குன்றம் அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை!!
Next post லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை!!