தென்னாப்பிரிக்காவில் கொடூரம்: 86 வயது கன்னியாஸ்திரி கற்பழித்துக் கொலை- பணம் கொள்ளை!!

Read Time:1 Minute, 37 Second

139cff29-8f12-4e76-8172-26f2c636a208_S_secvpfவெளிநாடுகளில் இருந்துவந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியுள்ள மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், இங்குள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கொடூர கும்பல் நுழைந்தது.

அங்கு தூங்கிக் கொண்டிருந்த 86 வயது கன்னியாஸ்திரியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் என்பவரின் கை, கால்களை கட்டிப் போட்டு, அவரை வெறித்தனமாக கற்பழித்து கொன்றது. அங்கிருந்த பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது என உள்ளூர் ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

1923-ம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டில் கத்தோலிக்க பெண்கள் கன்னியாஸ்திரியாவதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. பலியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் பல ஆண்டுகளாக அந்த கான்வென்ட்டில் தொண்டாற்றி வந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை!!
Next post தீபிகா படுகோனை படாத பாடு படுத்திய அமிதாப்!!