அருணின் பட வௌியீட்டை தள்ளி வைக்கச் சொன்ற அஜீத் – ஏன் தெரியுமா?

Read Time:1 Minute, 42 Second

Untitled-3ஹீரோவாக நடித்து வந்த அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்தார். இந்த வாய்ப்புக்காக தான் ஹீரோவாக நடித்த ‘வா’ பட வௌியீட்டை தள்ளிவைத்தது பற்றி கூறினார்.

அவர் கூறியது: சவால் என்று வந்தால் அதை வா வா என்று எதிர்கொள்ளும் கதாபாத்திரம். இப்படத்தை முடித்து வௌியிட தயாராக இருந்தபோது என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு வந்தது. கவுதம்மேனன் கதை சொன்னபோது எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் புரிந்தது.

அஜீத்திடம் ‘வா’ படத்தை வௌியிட்டு விட்டு நடிப்பதாக கூறினேன். படத்தை பார்த்த அவர், என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு வௌியிடும் படி கூறினார். அவர் சொன்னது ஏன் என்பது இப்போதுதான் புரிந்தது. அவருடன் நடித்தபிறகு எனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இத்தனை வருடம் எனக்கு கிடைக்காமல் இருந்தது.

இப்போது அவரது இரசிகர்களும் என்னை விரும்புகின்றனர். ‘வா’ படத்தில் கார்த்திகா ஹீரோயின். எஸ்.எஸ்.தமன் இசை. ஃபெதர் டச் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு, ஆர். ரத்தின சிவா இயக்கம்.இவ்வாறு அருண் விஜய் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாஜிக் காதலனை கடுப்பேற்றப் போகிறாரா நயன்?
Next post சிலியில் எரிமலை வெடித்து சிதறும் பிரமாண்ட காட்சிகள்- வீடியோ இணைப்பு!!