பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார தந்தை கைது!!
Read Time:1 Minute, 24 Second
மேற்கு வங்காள மாநிலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆசிரியர் ஒருவரிடம் விற்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
துப்குரியைச் சேர்ந்த பல்புல் ஹக் என்பவரின் மனைவிக்கு கடந்த சனிக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குழந்தையுடன் வீட்டுக்கு வந்ததும், அந்த குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசிய பல்புல் ஹக், மாதாபங்கா பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பார்த்தா பிஸ்வாசிடம் கொடுத்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பார்த்தா பிஸ்வாஸ் வீட்டிற்குச் சென்று குழந்தையை மீட்டனர். குழந்தையின் தந்தை பல்புல் ஹக் மற்றும் குழந்தையை விற்பனை செய்வதற்கு உதவி செய்த மற்றொரு ஆசிரியர் அதுல் பாசக் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பார்த்தா பிஸ்வாசை போலீசார் தேடிவருகின்றனர்.
Average Rating