உடுமலை அருகே மாணவி பாலியல் பலாத்கார முயற்சி: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்!!

Read Time:2 Minute, 4 Second

852967a8-19e0-4a8e-b52c-61af8fffffb2_S_secvpfதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வேலப்பநாயக்கன்புதூர் அரிஜன வீதியை சேர்ந்த சின்னபழனியின் மகன் செல்லமுத்து (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 28–3–2014 அன்று இரவு செல்லமுத்து, தனது வீட்டுக்கு அருகே உள்ள 16 வயது பிளஸ்–1 மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று சோளக்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் செல்லமுத்துவை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தலீலா, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செல்லமுத்துவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு, ரூ.50 ஆயிரம் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, முதல்–அமைச்சரின் நிவாரண நிதியை பெறவும் கோர்ட்டு மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார். கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து செல்லமுத்துவை போலீசார் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளியலறை கட்டும் விவகாரத்தில் ராணுவ வீரர் மனைவிக்கு கொலை மிரட்டல்: கட்டிட தொழிலாளி மீது புகார்!!
Next post கிண்டியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை!!