நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஐஸ்வர்யாராய்!
பாலிவுட்டில் பணத்திற்கு பஞ்சமில்லை. கோடிகளை கொட்டி பிரமாண்டமான சரித்திரப் படங்களை எடுக்கிறார்கள். சரித்திரப் படங்களில் ராணியாகவோ, ராஜாவின் காதலியாகவோ நடிக்க, இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஐஸ்வர்யாராய்! லகான்’ படத்தை இயக்கிய அசுதோஷ் கோவரிகர் ‘ஜோதா அக்பர்’ படத்தை இயக்கியிருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் கதை அக்பருக்கும் அவரது காதலி ஜோதா பாய்க்கும் நடுவில் உள்ள காதலை பற்றியது. அக்பராக ஹிருத்திக் ரோஷனும், ஜோதா பாயாக ஐஸ்வர்யாராயும் நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். படத்திற்கு செலவு செய்த பணத்தை எடுக்க வேண்டுமென்றால், இந்திய ஜனத்தொகையில் கணிசமான சதவீதம் படத்தைப் பார்த்தாக வேண்டும். அதனால் ‘ஜோதா அக்பரை’ தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இதற்குமுன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் நடித்த சரித்திரப் படம் பெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படமாவது வெற்றி பெறுமா என படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் உலக அழகி!