மும்பையின் பிரபல போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவி பேபி கைது!!

Read Time:1 Minute, 59 Second

007ec0e8-11a3-4f46-b032-beadc3b4aeed_S_secvpfமும்பை போலீசாருக்கு நீண்ட காலமாக டிமிக்கி கொடுத்து வந்த மும்பை போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவியான பேபி படங்கரை(53) போலீசார் இன்று கைது செய்தனர்.

மும்பையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் நம்பர் ஒன் புள்ளியாக இருந்து வந்த பேபி, இதன் மூலமாக பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் குவித்துள்ளார். இவருக்கென்று மும்பையிலும், மகாராஷ்டிராவின் இதர பகுதிகளிலும் 3 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

கடந்த 45 நாட்களாக 10 தனிப்படை போலீசார் இவரை தேடி வந்த நிலையில் இன்று சமூக நல பிரிவு போலீசார் மும்பை-பவுண்ட் செல்லும் பேருந்தில் இருந்த பேபியை பன்வல் என்ற இடத்தில் வைத்து கைது செய்தனர்.

மும்பை போலீஸ்காரர் தர்மராஜ் கலோகேவின் கள்ளக் காதலியான பேபியின், போதை பொருள் வியாபாரத்திற்கு தர்மராஜும் உடந்தையாக இருந்து வந்தார். அவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 22 கோடி மதிப்புள்ள 126 கிலோ போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பேபி தலைமறைவானார். தற்போது அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் அவரை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி பேபியை வருகிற 28-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிரடி மாற்றம்: அனைத்து படிவங்களிலும் மூன்றாம் பாலினத்தையும் சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் உத்தரவு!!
Next post நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை!!