காதலிக்கு வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவர்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் பிரபாகரன் (வயது 22). கோவை பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள உடற்கல்வி கல்லூரியில் முதலாம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இதற்காக காமராஜர் நகரில் ஒரு வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். பிரபாகரன் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. மாலையில் நண்பர்கள் வீட்டுக்கு திரும்பிய போது பிரபாகரன் வீட்டின் ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் பிரபாகரனின் அறை மற்றும் செல்போனை சோதனை செய்தனர். அந்த செல்போனில் கடைசியாக வாட்ஸ்அப் மூலம் ஒரு நம்பருக்கு எம்.எஸ்.எஸ். அனுப்பி இருந்தார். அதில் ‘நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேன்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிரபாகரன் யாருக்கு இந்த மெசேஜை யாருக்கு அனுப்பினார்? என போலீசார் விசாரித்தனர். இதில் அவர் பல்லடத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்ததும், அடிக்கடி அந்த பெண்ணுடன் செல்போனில் பேசியதும் தெரிய வந்தது. ஆனால் அந்த பெண் தனக்கு காதலில் விருப்பம் இல்லை என கூறி விட்டாராம். காதல் தோல்வியடைந்த சோகத்தில் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
Average Rating