ஆரணி அருகே கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்!!
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 20). இவருக்கும் திமிரியை சேர்ந்த குப்பராமன் மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் கடந்த ஒரு வருடமாக நெருங்கி பழகி வந்தனர். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கிருஷ்ணமூர்த்தி மகாலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் மகாலட்சுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு அவருடைய பெற்றோர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
இதுகுறித்து மகாலட்சுமி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்தார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் அருகே உள்ள வேம்புலி அம்மன் கோவிலில் கிருஷ்ணமூர்த்தி மகாலட்சுமி கழுத்தில் தாலி கட்டினார்.
Average Rating