கலசபாக்கம் அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் கோர்ட்டில் சரண்!!

Read Time:2 Minute, 38 Second

713d1e45-9196-446b-8c9e-c709d6fc74af_S_secvpfகலசபாக்கத்தை அடுத்த பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 57). இவரது கணவர் அழகேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ராஜகுமாரி (27) என்ற மகள் இருந்தார். இவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயா அங்குள்ள விவசாய நிலத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடலாடி போலீசார் சென்று விஜயாவின் உடலை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் விஜயாவை அவருடைய அக்கா சின்னபாப்பாவின் மருமகள் செல்வி கொலை செய்தது தெரியவந்தது. சின்னபாப்பவின் மகன் முருகன் (39), முருகனின் மனைவி செல்வி ஆகியோர் விஜயாவிடம் சென்று உங்கள் மகள் ராஜகுமாரிதான் இறந்து விட்டாரே உங்களது சொத்துக்களை எங்களுக்கு எழுதி கொடுங்கள் என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலாடி போலீசில் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முருகனை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக முருகனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சொத்து தர மறுத்ததால் விஜயாவை, அவருடைய அக்கா சின்னபாப்பாவின் மருமகள் செல்வி கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதுபற்றி கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செல்வி ஆரணி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு முருகவேல் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து செல்வி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சின்னபாப்பாவை கலசபாக்கம் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுப்பெண் தூக்குப்போட்டு சாவு: மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கைது!!
Next post திருட்டு வழக்கில் சிறையில் அடைப்பு: திருமணத்துக்காக கைதிக்கு ஒரு நாள் ஜாமீன் கோர்ட்டு உத்தரவு!!